நடிகர் மனோபாலா கடந்த 1953-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி கோயம்புத்தூர் அருகே உள்ள சூலூரில் பிறந்தார். அரசு கலைக் கல்லூரியில் ஓவியப் பட்டதாரியான இவர், கமல், மணிரத்னம், சந்தான பாரதி, பி.சி.ஸ்ரீராம், ராபர்ட்-ராஜசேகர் மற்றும் பலர் அடங்கிய புகழ்பெற்ற "ஆழ்வார்பேட்டை" குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். கமலின் வீடுதான் அவர்களின் தங்குமிடமாக இருந்தது. மனோபாலாவை பாரதிராஜாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கமல்தான்.