இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 11 நாட்களே உள்ளதால், புரமோஷன் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றி பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
கல்கியின் இந்த கதையை படமாக எடுக்க ஏதுவாக திரைக்கதை அமைக்க ஜெயமோகனும், குமரவேலும் எனக்கு உதவினார்கள். புத்தகத்தில் இருப்பது போன்று படத்துக்காக காட்சிப்படுத்த முடியாது என்பதால் பல காட்சிகளை சினிமாவுக்கு ஏற்றபடியும், அனைவருக்கும் சுலபமாக புரியும் படியும் காட்சிப்படுத்தி இருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் நான் மிகவும் பயந்த விஷயம் என்றால் அது நடிகர், நடிகைகள் குண்டாகிவிடுவார்களோ என்பது தான். ஆனால் அவர்கள் அந்த சூழலிலும் வீட்டில் இருந்தபடியே கடுமையாக உடற்பயிற்சி செய்து அதே உடற்தகுதியோடு இருந்தார்கள்.