ஐஸ்வர்யா ராய்யின் மகள் ஆராத்யாவுக்கு 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வாய்ப்பு கொடுத்த மணிரத்தினம்!

Published : Sep 26, 2022, 01:19 PM IST

'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகளுக்கு... இயக்குனர் மணிரத்னம் முக்கிய பொறுப்பு ஒன்றை அவ்வப்போது கொடுத்ததாக ஆச்சர்யத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.  

PREV
15
ஐஸ்வர்யா ராய்யின் மகள் ஆராத்யாவுக்கு 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வாய்ப்பு கொடுத்த மணிரத்தினம்!

 திருமணத்திற்கு பின்னர் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய், ராவணன் படத்திற்கு பின், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம், 'பொன்னியின் செல்வன்'. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகியுள்ள இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள நிலையில், முதல் பாகத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தற்போது புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

25

இந்த புரோமோஷன் பணியில்... படக்குழுவை சேர்ந்த அனைத்து முக்கிய நடிகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய்யும், படத்தின் புரோமோஷனுக்காக சில பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி அவர் பேட்டி கொடுத்தபோது ஆச்சர்ய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். 

மேலும் செய்திகள்: கூலிங் கிளாஸ் போட்டு ஐஸ்வர்யா ராயுடன் கூலாக செல்ஃபி எடுத்த பார்த்திபன் - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்
 

35

அதாவது இயக்குனர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது, முக்கிய பொறுப்பை ஒன்றை கொடுத்ததாக கூறியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய், 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது, சில சமயங்களில் தன்னுடைய மகள் ஆராத்யாவையும் கூடவே அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அம்மாவுடனே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் ஆராத்யாவுக்கு இயக்குனர்கள் மட்டுமே சொல்லக்கூடிய வார்த்தையான, 'ஆக்சன்' என்று சொல்லும் பொறுப்பை கொடுத்ததாக கூறியுள்ளார்.
 

45

அதாவது இயக்குனர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது, முக்கிய பொறுப்பை ஒன்றை கொடுத்ததாக கூறியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய், 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது, சில சமயங்களில் தன்னுடைய மகள் ஆராத்யாவையும் கூடவே அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அம்மாவுடனே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் ஆராத்யாவுக்கு இயக்குனர்கள் மட்டுமே சொல்லக்கூடிய வார்த்தையான, 'ஆக்சன்' என்று சொல்லும் பொறுப்பை கொடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: STR என தன்னையே கூறிக்கொண்டு... மன்மதனாக மாறிய கூல் சுரேஷ்! நடிகையின் தொடையை பிடித்தபடி வெளியான புகைப்படம்!
 

55

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முக்கிய நடிகர் நடிகைகளான, சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை, லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

மேலும் செய்திகள்: இதை மட்டும் செய்யாதீர்... மீறினால் தக்க நடவடிக்கை! சூர்யா 42 படக்குழு விடுத்த பகீர் எச்சரிக்கை!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories