தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். நானே வருவேன் படம் வருகிற செப்டம்பர் 29-ந் தேதியும், பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ந் தேதியும் ரிலீஸாக உள்ளது. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய வேண்டாம் என தனுஷ் ரசிகர்களே கோரிக்கை விடுத்து வந்தனர். அதையும் மீறி தற்போது வெளியிட உள்ளனர்.
இதையும் படியுங்கள்... அனிருத்தின் தாத்தா... பிரபல இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணனன் காலமானார்
பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்டமாக புரமோட் செய்து வருகின்றனர். அதன் பயனாக அப்படத்தின் முன்பதிவும் படு ஜோராக நடந்து வருகிறது. ஏராளமான இடங்களில் முதல் நாள் முழுவதும் ஹவுஸ்புல் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மறுபக்கம் நானே வருவேன் படத்தின் நிலைமை படு மோசமாக உள்ளது.