மலையாள திரையுலகில் சர்ச்சைக்குரிய நடிகர்களாக வலம் வந்த ஷேன் நிகாம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகிய இருவருக்கும் தற்போது நடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் குடிபோதையில் ஷூட்டிங்கிற்கு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. அதுமட்டுமின்றி ஷூட்டிங் ஸ்பாட்டிலும் மற்றவர்களுக்கு பிரச்சனை கொடுக்கும் விதமாக நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சுயநினைவை இழக்கும் அளவுக்கு குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வரும் அவர்கள் இருவர் மீதும் கேரள திரைப்பட பணியாளர்கள் கூட்டமைப்பான ஃபெஃப்கா மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து இந்த தடை நடவடிக்கையை எடுத்துள்ளது. அவர்கள் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இனி அவர்கள் இருவரும் படங்களில் நடிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இதையும் படியுங்கள்.. அரசியல்னா எனக்கு என்னன்னே தெரியாது; கண்டிப்பா வரமாட்டேன் - என்ன நடிகர் விஜய் இப்படி சொல்லிருக்காரு!