மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. பான் இந்தியா படமாக ரிலீசான இப்படத்திற்கு அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக வெளிநாடுகளில் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இதனால் படக்குழுவும் செம்ம ஹாப்பியாக உள்ளது.