பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். அந்நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்றபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர், தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டதால கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் பற்றி அவதூறாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.