8 மாதம் டைம் கொடுத்தும் கதையை திருப்திகரமாக தயார் செய்யாததன் காரணமாக, படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, இயக்குனரை மாற்றும் முடிவுக்கு அஜித்தும், சுபாஸ்கரனும் வந்துள்ளனர். இதையடுத்து தான் அஜித்துக்கு கதை கூறுமாறு இயக்குனர் மகிழ் திருமேனிக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பால் மிகவும் உற்சாகம் அடைந்த மகிழ் திருமேனி, தன்னிடம் இருந்த ஒரு மாஸான திரில்லர் கதையை கூறி இருக்கிறார். இந்தக் கதை அஜித்துக்கும், சுபாஸ்கரனுக்கும் பிடித்துப் போனதால், அவர்கள் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனிக்கு கொடுத்துவிட்டார்களாம்.