தமிழ் படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். சினிமா பத்திரிகையாளரான இவர், சமீப காலமாக யூடியூபில் முன்னணி நடிகர், நடிகைகள் பற்றி பல்வேறு அந்தரங்க தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஒருமுறை நடிகை ராதிகா பற்றி இழிவாக பேசி பயில்வான் ரங்கநாதனை திருவான்மியூர் கடற்கரையில் வைத்து, ராதிகா அறைந்த சம்பவமும் அரங்கேறியது.