இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்த படத்தின் தோல்விக்கு ரஜினி எடுத்த முடிவு தான் காரணம் என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறி உள்ளார். அதன்படி, லிங்கா படத்திற்கு முதலில் தான் வேறு ஒரு கிளைமேக்ஸை வைத்திருந்தாகவும், ஷூட்டிங் சமயத்தில் ரஜினி சில சீன்களை பார்த்துவிட்டு, மாற்ற சொல்லிவிட்டாராம். முதலில் பலூன் சீனெல்லாம் இல்லவே இல்லையாம், ரஜினி சொல்லிவிட்டார் என்ற ஒரு காரணத்தினாலும், படத்தை குறிப்பிட்ட தேதியில் முடிக்கச் சொல்லி தயாரிப்பு தரப்பு அழுத்தம் கொடுத்ததாலும் வேறுவழியின்று அந்த கிளைமேக்ஸ் சீனை எடுத்து படத்தை வெளியிட்டதாக வேதனையுடன் கூறி உள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.
இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதியை அடிக்க வேண்டாமுன்னு சொல்லுக.. அப்பாவிடம் கதறி அழுத 'சூப்பர் சிங்கர்' பிரபலம்!