தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோயின் யார் தெரியுமா? கண்டிப்பா விஜயசாந்தி இல்ல!

First Published Oct 1, 2024, 8:22 PM IST

Kollywood Action Heroine : தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகரான வகையில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார் ஹீரோயின்கள் என்றே கூறலாம்.

Vijayashanthi

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஹீரோக்களுக்கு இணையான புகழோடு வலம் வருபவர்கள் நான் நாயகிகள். இன்னும் சொல்லப்போனால் சில காலகட்டங்களில் நாயகர்களை விட நாயகிகளுக்கு தான் பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வந்திருக்கிறது. அதேபோல தமிழ் சினிமாவில் ஆரம்ப காலம் தொட்டேன் விஜய் லலிதா, விஜயசாந்தி, நடிகை வரலட்சுமி சரத்குமார் என்று பல ஹீரோயின்கள் இயல்பான நடிப்பை தாண்டி, ஆக்சன் ஹீரோயின்களாகவும் பல திரைப்படங்களில் அசத்தியிருக்கின்றனர்.

12 வயது மகளின் குற்றச்சாட்டு; 'இனி உன் வாழ்க்கையில் வரமாட்டேன்' கூனி குறுகிய நடிகர் பாலா!

vijaya lalitha

அதிலும் குறிப்பாக பிரபல நடிகை விஜயலலிதா கடந்த 1970ம் ஆண்டு நடித்த "ரிவால்வர் ரீட்டா" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பல திரைப்படங்களில் அவர் ஆக்சன் நாயகியாகவும் நடிப்பது அசத்தியிருக்கிறார். பொதுவாக கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் மட்டுமே ஏற்று நடித்து வந்த விஜயலலிதா, ஒரு கட்டத்தில் மிகப்பெரிய ஆக்சன் ஹீரோயினாக வலம் வந்தது அனைவரும் அறிந்ததே. 

அதேபோல தமிழ் சினிமா வரலாற்றில் அதிக அளவிலான திரைப்படங்களில் போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரியாக வேடமிட்டு அதிக ஆக்சன் காட்சிகளில் நடித்தது நடிகை விஜயசாந்தி தான். இன்னும் சொல்லப்போனால் ராம்கி போன்ற பல முன்னணி நடிகர்களே அவருடைய திரைப்படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல மொழிகளில் கொடி கட்டி பறந்த விஜயசாந்தி அந்த காலத்தில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர். அது மட்டும் அல்லாமல் எந்த விதமான ஸ்டண்ட் காட்சிகளையும் டூப் இல்லாமல் அவரே நடிக்கும் வழக்கம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos


varalaxmi sarathkumar

அதன் பிறகு பெரிய அளவில் நாய்கிகள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க முன்வராத நிலையில், பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய படங்களில் அதிக அளவிலான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெல்வட் நகரம், கிராக் போன்ற பல படங்களில் அவர் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார்.

SD Subbulakshmi

ஆனால் இவர்கள் அனைவருக்கும் முன்பாகவே சுதந்திரத்திற்கு முன்னதாகவே வெளியான திரைப்படங்களில் ஆக்ஷன் நாயகியாக நடித்து அசத்திய ஒரு நடிகை தான் எஸ்.டி சுப்புலட்சுமி. சரித்திர படங்களில் பெரிய அளவில் நடித்து வந்த இவர், "நவீன சதாரராம்" என்ற படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதாவது ஒரு நாட்டின் இளவரசியாக நடித்த அவர், திருடர்களை கண்டுபிடிப்பதற்காக ஆண் வேடமிட்டு நகர வளம் செல்வார். அப்பொழுது சண்டை காட்சிகளிலும் அவர் தைரியமாக நடித்திருக்கிறார். 

அது மட்டும் அல்ல, கடந்த 1939ம் ஆண்டு வெளியான "தியாக பூமி" என்கின்ற திரைப்படத்தில் அந்த காலகட்டத்திலேயே பிரிட்டிஷாரை எதிர்த்து இந்திய விடுதலைக்காக படங்களில் நடித்தவர் சுப்புலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. 1934ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை இவர் திரைப்படங்களில் நடித்து வந்தார். பிரபல தமிழ் திரையுலக நடிகர் கே. சுப்பிரமணியன் என்பவரை தான் அவர் திருமணம் செய்து கொண்டார். கடந்த 1970ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "எங்கிருந்தோ வந்தால்" என்கின்ற திரைப்படத்தில் தான் இவர் இறுதியாக நடித்திருந்தார்.

மீண்டும் கோலிவுட் ஹீரோவுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்.. தளபதி 69 - வெளியான முதல் அப்டேட்!

click me!