மெரினாவில் ரொமான்ஸ்... 7 வருஷம் டேட்டிங் - முதன்முறையாக உதயநிதி உடனான லவ் ஸ்டோரியை சொன்ன கிருத்திகா

First Published Aug 1, 2022, 2:29 PM IST

Kiruthiga Udhayanidhi : உதயநிதி - கிருத்திகா தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் தங்களது காதல் வாழ்க்கை பற்றியும், குடும்பம் பற்றியும் பல்வேறு விஷயங்களை பேசி உள்ளனர். 

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக உயர்ந்து, தற்போது பிசியான அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான இவர், கடந்த 2002-ம் ஆண்டு கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

உதயநிதியின் மனைவி கிருத்திகாவும் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு சிவா இயக்கத்தில் வெளியான வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா, இதையடுத்து 2018-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த காளி என்கிற படத்தை இயக்கினர். பின்னர் 4 ஆண்டு இடைவெளிக்கு பின் தற்போது பேப்பர் ராக்கெட் என்கிற வெப் தொடரை இயக்கி வெளியிட்டுள்ளார்.

உதயநிதி - கிருத்திகா தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், சமீபத்தில் அதனை கொண்டாடும் விதமாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இருவரும் முதல்முறையாக ஜோடியாக பேட்டி கொடுத்தனர். அதில் தங்களது காதல் வாழ்க்கை பற்றியும், குடும்பம் பற்றியும் பல்வேறு விஷயங்களை அவர்கள் ஷேர் செய்தனர். அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... 'திருச்சிற்றம்பலம்' இசை வெளியீட்டு விழாவிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்..! இது தான் காரணமாம்..?

உதயநிதி உடனான காதல் வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொண்ட கிருத்திகா, முதலில் உதய் தன்னிடம் காதலை சொன்னபோது, நான் ரிஜெக்ட் பண்ணிட்டேன். அரசியல் குடும்பம் என்பதால் தான் நோ சொன்னேன். பின்னர் கெஞ்சி கேட்ட பின் தான் ஓகே சொன்னேன். நாங்கள் இருவரும் திருமணத்துக்கு பின்னர் 7 ஆண்டுகள் டேட்டிங் செய்தோம், நாங்க லவ் பண்ற டைம்ல உதய் கிட்ட வண்டி எதுமே இருக்காது. 

அதனால் அவரை நான் தான் தினமும் எனது ஸ்கூட்டியில் பிக் அப் பண்ணிக்கிட்டு போவேன். தினமும் மெரினா பீச்சுக்கு தவறாம போகிடுவோம். அங்கு ரொமான்ஸ் பண்ணிவிட்டு, பின்னர் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போவோம் என கூறிய கிருத்திகா, உதய் தன்னிடம் அரசியலுக்கு போகவே மாட்டேன் என சத்தியம் பண்ணிய விஷயத்தையும் சொல்லி சிரித்தார்.

இதையும் படியுங்கள்... Jigarthanda 2 : ‘ஜிகர்தண்டா 2’ ஆரம்பிக்கலாங்களா.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ் - ஹீரோ இவரா?

click me!