ரியல் ஹீரோவான KGF இயக்குனர்! சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட பணத்தை வாரிவழங்கிய பிரசாந்த் நீல்- எவ்வளவு தெரியுமா?

First Published Aug 17, 2022, 3:31 PM IST

Prashanth Neel : இயக்குனர் பிரசாந்த் நீல் தனது சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட உதவியுள்ள தகவல் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

கன்னட திரையுலகில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான உக்ரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரசாந்த் நீல். இதையடுத்து இவர் இயக்கிய கே.ஜி.எஃப் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு மட்டுமின்றி அவரை இந்திய அளவில் பாப்புலர் ஆக்கியது. கே.ஜி.எஃப் படத்தின் வெற்றிக்கு பின் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வெற்றிகண்டார் பிரசாந்த் நீல்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து அவர் இயக்கத்தில் தற்போது சலார் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் டிரைலரை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... அதுவும் எப்போ தெரியுமா?

இந்நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் தனது சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட உதவியுள்ள தகவல் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவடத்தில் உள்ள நீலகண்டபுரம் தான் பிரசாந்த் நீலின் பூர்வீக கிராமம். தனது தந்தையின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பூர்வீக கிராமத்துக்கு சென்றுள்ளார் பிரசாந்த் நீல்.

அப்போது அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் கண் மருத்துவமனை கட்ட ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார் பிரசாந்த் நீல். இந்த தகவலை கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ரகுவீர ரெட்டி தெரிவித்துள்ளார். இவரின் சொந்த தம்பி சுபாஷின் மகன் தான் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளர் அஷ்வின் கங்கராஜு இயக்கத்தில் தயாராகும் '1770'!

click me!