மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவியும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்திருக்கின்றனர். இதுதவிர விக்ரம் பிரபு, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.