விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்நிகழ்ச்சி இந்த அளவுக்கு பேமஸ் ஆனதற்கு காரணமே அதனை நேர்த்தியாக தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் தான். இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் விஷயங்கள் சில நேரங்களில் பேசுபொருளாகவும் ஆவதுண்டு.
அந்த வகையில் கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், கணவனை விட அதிகம் சம்பாதிக்கு மனைவிமார்களும், அவர்களுடைய கணவன்மார்களும் கலந்துகொண்டனர். இதில் ஒரு பெண் தனது கணவர் தனது மகளின் ரேங்க் கார்ட்டை ஒரு நேரமாக பார்ப்பாம் என்றும் அவருக்கு எதுவும் படிக்க தெரியாது என்றும் ஏளனமாக பேசினார். அதற்கு அந்த தந்தை சொன்ன பதில் தான் அனைவரையும் கலங்க செய்தது.