மயில்சாமி, எனக்கு சிறுத்தை படத்திலிருந்து பழக்கம். தனக்கு மிஞ்சியது தான் தானம்னு சொல்வாங்க. ஆனால் தானத்துக்கு மிஞ்சியது தான் தனக்கு என வாழ்ந்தவர் அவர். கடன் வாங்கி தானம் பண்ணினார். சென்னை பெரு வெள்ளம் சமயத்தில் அவரிடம் இருந்த செயின், மோதிரத்தை விற்று நிறைய பேருக்கு உணவளித்தார். யாருக்காகவும் உதவி கேட்க அவர் தயங்கவே மாட்டார். எம்.ஜி.ஆரின் தீவிர தொண்டனாக இருந்து. அவரைப்போலவே வாழ்ந்தவர். அவரது இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது.