தமிழ், தெலுங்கு படங்களைப் போல் சமீப காலமாக கன்னட மொழி படங்களும் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன. முன்னதாக கே.ஜி.எஃப் படத்தை இந்திய சினிமாவே கொண்டாடிய நிலையில், தற்போது மற்றுமொரு கன்னட படமான காந்தாராவை கொண்டாடத் தொடங்கி உள்ளனர். ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள இப்படம் தான் தற்போது இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது.