serial actor Babloo Prithiveeraj : பொம்பள சோக்கு கட்டாயம் தேவை ...வெளிப்படையாக பேசிய பப்லூ ப்ரித்திவிராஜ்

First Published Oct 28, 2022, 9:29 PM IST

பொம்பளை சோக்கு கேக்குதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பப்லூ ப்ரித்திவிராஜ், தேவை என்று கூறினார்....

babloo

நடிகர் அஜித்குமாரின் அவள் வருவாளா படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டி இருந்தவர் பப்லூ ப்ரித்திவிராஜ். பல படங்களிலும் தோன்றியிருந்த இவர் ஜோடி நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோ மூலம் மேலும் பிரபலமானார். பின்னர் சீரியல்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

Babloo

முன்னதாக அந்த ரியாலிட்டி ஷோவின் போது சிம்புவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் சிம்பு அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த பிரச்சனையும் இவருக்கு அதிக அறிமுகத்தை கொடுத்தது. அதன் பிறகு கௌதம் வாசுதேவ் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்திருந்த பப்லூ, "அரசி" சீரியலில் திருநங்கையாக நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...rajinikanth next : லைகாவுடன் 2 படம் பட்டையை கிளப்பும் சூப்பர் ஸ்டார்...எப்ப பூஜை தெரியுமா?

இவர் தற்போது சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில் தந்தை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் விவகாரத்து பெற்ற பப்லூ இரண்டே மாதத்தில் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

56 வயதிலும் கட்டுக்கோப்பான உடலை கொண்ட பப்லூ பிரிதிவீராஜ், இந்த வயதில் திருமணம் செய்திருக்கும் செய்தி பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது. முன்னதாக மீனா என்ற பெண்ணை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு அஹத் என்ற மகன் உள்ளார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் அந்த மகனின் காரணமாக இருவருக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே விவாகரத்து பெற்றனரா.

தற்போது தனது இரண்டாவது திருமணம் குறித்து  பேட்டி அளித்துள்ளனர் பப்லூ பிரிதிவீராஜ் மற்றும் ஷீத்தல்.. அந்த பேட்டியில் தங்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திய இவர்கள் தாங்கள் நிகழ்காலத்தில் வாழ்கிறோம் என்றும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் ஷீத்தல் தன்னை முதலில் காதலிப்பதாக கூறியதாகவும் அதனை  தான் ஏற்று கொண்டதாகவும் கூறியுள்ளார். 

Babloo Prithiveeraj

மேலும் செய்திகளுக்கு...வதந்திகளை ஒப்புக்கொள்ளும் சித்தார்த்.. இதயராணிக்கு பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் சினிமாவில் கூறுவது போல காதலுக்கு வயதில்லை என்றும் ஒரு பிட்டை போட்டுள்ளார் பப்லூ. எனது முன்னாள் மனைவி மரியாதை, அன்பு, நெருக்கம் போன்ற தனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை அதனால் தான் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியானேன் என்றும் கூறுயுள்ள இவர்  இன்று நான் செய்வதை எத்தனை ஆண்களால் செய்ய முடியும். நான் திறமையாக இருப்பதால் இதைச் செய்கிறேன் தாங்க முடியலனா..இருக்கட்டும். உங்களுக்கு எரியுதா? எரியட்டும் என கூறியுள்ளார்.

அதோடு பொம்பளை சோக்கு கேக்குதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பப்லூ பிரிதிவீராஜ், தேவை என்று கூறினார். அவர்  பண திமிரால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறீரா என கேட்டதற்கு ஆம் பணத்தால் தான் முதலில் பணத்தை சம்பாதித்து பின் விருப்பம் போல் வாழலாம் என கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

click me!