Published : Aug 18, 2023, 05:32 PM ISTUpdated : Aug 18, 2023, 05:36 PM IST
PSBB பள்ளியில் நடந்த கல்ச்சுரல் விழாவில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டு மாணவர்களை உச்சாகப்படுத்தினர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீப காலமாகவே... பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
28
அந்த வகையில், கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர்... கோவையில் நடந்த கல்லூரி விழாவில் கலந்து கொண்டு, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதை தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து சென்னையில் உள்ள PSBB பள்ளியில் நடந்த கல்ச்சுரல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
48
இருவருமே, நம் நாட்டின் வருங்கால முதுகெலும்பாக பார்க்கப்படும் மாணவர்களிடம் சில நிமிடங்கள் பேசியது மட்டும் இன்றி, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டனர்.
அதே போல் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பின்னர்... தற்போது அடுத்தடுத்து நான்கு படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். நயன்தாராவுடன் நடித்துள்ள இறைவன் திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.
88
இதை தொடர்ந்து பெயரிடப்படாத படம் ஒன்றிலும், சைரன், ஜீனி ஆகிய படங்களும் இவரின் கைவசம் உள்ளது. அதே போல் இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற தனி ஒருவரின் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.