தமிழ் திரையுலகின் மூலம் பிரபலமாகி பின்னர் தமிழக அரசியலில் தடம் பதித்து மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்து வந்தவர்கள் என்றால் அது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான். இன்று அதிமுக என்கிற கட்சி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவர்கள் இருவரும் தான். சினிமாவிலும் இவர்கள் இருவரது படங்களுக்கும் எப்போதுமே தனி மவுசு உண்டு.