நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்தியா நடிகையாகிவிட்டார். தற்போது அவர் கைவசம் விஜய்யின் வாரிசு திரைப்படம் உள்ளது. இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா 2, இந்தியில் ரன்பீர் கபூர் உடன் அனிமல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவை அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்களாகும்.
இந்நிலையில், தற்போது தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்க உள்ள ஜான்வி கபூரும், சம்பள விஷயத்தில் கறார் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த படம் தான் தென்னிந்திய திரையுலகில் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க அவர் கேட்டுள்ள சம்பளம் தான் தயாரிப்பாளர்களை தலைசுற்ற வைத்துள்ளதாம். முதல் படத்திலேயே அவர் ராஷ்மிகாவை விட அதிக சம்பளம் கேட்டுள்ளதால் டோலிவுட்டே ஆடிப்போய் உள்ளதாம்.