கலைஞர் அட்டைக்காக ஷைனியின் ஆதார் விவரங்களை கேட்டுள்ளது மோசடி கும்பல், பின்னர் அந்த அட்டைக்கான தொகையாக ரூ.12 ஆயிரத்து 500 உடனடியாக செலுத்துமாரு கூறி இருக்கிறார்கள். இதனால் சந்தேகம் அடைந்த அந்த நடிகை 2 நாள் அவகாசம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்களோ முதல் தவணையாவது கட்டுங்கள் என வற்புறுத்தி இருக்கிறார்கள். இது ஷைனிக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், கோலிவுட்டில் நடித்த நடிகை ஒருவரை தொடர்பு கொண்டு, நடந்ததை கூறி இருக்கிறார். அதற்கு அந்த நடிகை கோலிவுட்டில் பணியாற்ற கலைஞர் அட்டையெல்லாம் தேவையில்லை என்று கூறி பின்னர் தான் தன்னிடம் தொடர்பு கொண்டது மோசடி கும்பல் என ஷைனிக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் இதுபோன்ற அழைப்புகள் வரும்போது கவனமாக இருக்க வேண்டும் என ஷைனி வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Jailer 2: முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம் - ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!