இந்நிலையில், இயக்குனர் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு தோசா கிங் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியில் தயாராக உள்ள இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார் ஞானவேல்.
இப்படம் தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி இடையே 18 ஆண்டுகளாக நடந்த வழக்கை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். ஜெய் பீம் போன்றே இதுவும் உண்மை கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்... திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்த நடிகை ரோஜா... மக்களோடு மக்களாக நடந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினார்