சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த மாதம் 9-ஆம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னுடைய லாக்கரில் வைக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த 3 வருடங்களாக இந்த லாக்கரை நான் திறந்து பார்க்கவில்லை என்றும், தன்னுடைய வீட்டில் வேலை செய்து வரும் மூன்று பேருக்கு, லாக்கரின் சாவி எங்கு இருக்கிறது என்பது தெரியும் என குறிப்பிட்டிருந்தார்.