சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் இப்படம் கைவிடப்பட உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது.