Samantha: நோயால் அவதிப்படும் சமந்தா..! மனம் மாறிய நாகசைதன்யா.. மீண்டும் சேர்ந்து வாழ நடக்கிறதா பேச்சுவார்த்தை?

First Published Nov 4, 2022, 9:35 PM IST

நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில்... உண்மை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
 

9 வருடங்கள் உருகி உருகி காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கோவாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட, சமந்தா - நாகசைதன்யா ஜோடி, திடீர் என கடந்த ஆண்டு விவாகரத்து குறித்து அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். இவர்கள் இருவரின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், இருவருமே இது குறித்து வெளிப்படையாக கூறவில்லை.
 

மேலும் விவாகரத்தாலும், இதன் காரணாமாக எழுந்த பல்வேறு விமர்சனங்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தா தோழியுடன் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வந்தார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அரவணைப்பு மற்றும் பாசத்தால், முழுமையாக நாகசைதன்யா உடனான விவாகரத்து விஷயத்தில் இருந்து மீண்ட சமந்தா மீண்டும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கினார்.

மேலும் செய்திகள்: Hansika Marriage: தோழியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாகும் ஹன்சிகா..! வெளியான ஷாக்கிங் தகவல்!
 

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வந்த படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார் சமந்தா. அந்த வகையில் இவர் நடிப்பில், நவம்பர் 11 ஆம் தேதி, 'யசோதா' திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் மையோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டே டப்பிங் போன்ற  பணிகளையும்மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலானது.
 

சமந்தா, இப்படி ஒரு அரியவகை பிரச்சனையால் அவதி படுவதை அறிந்து அவரது முன்னாள் கணவர்... நாகசைதன்யா சமந்தாவை சந்தித்ததாக கூறப்பட்டது. மேலும் இருவரும், விவாகரத்து முடிவை கைவிட்டு விட்டு, சேர்ந்து வாழ முடிவு செய்ததாகவும் சில செய்திகள் வெளியாகின. ஆனால் இப்படி வெளியான தகவலில் உண்மை இல்லை என தற்போது தெரியவந்துள்ளது. மேலும் விரைவில் சமந்தாவே இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' தான் இரவின் நிழல் ஓடிடியில் வெளியாகததற்கு காரணமா? குழம்ப வைத்த பார்த்திபனின் பதிவு!
 

click me!