இந்நிலையில் வெந்து தணிந்தது காடு இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது எது மாஸ்னு மக்கள் சொல்லட்டும் என கூறியதாகவும், இதன்மூலம் அவர் தனுஷை தாக்கி பேசியுள்ளதாக பதிவுகள் போடப்பட்டு வந்தன. ஆனால் உண்மையில் அங்கு நடந்தது என்னவென்றால், சிம்புவிடம் தொகுப்பாளர்கள் ஒரு கேள்வியை கேட்டுள்ளனர். வெந்து தணிந்தது காடு திரைப்படம் மாஸா அல்லது கிளாஸா என கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த சிம்பு, நான் மாஸு, கிளாஸுன்னு சொல்ல விரும்பல. நம்ம படம் பண்றோம், அது தான் நம்ம வேலை. அது மாஸா, கிளாஸானு மக்கள் தான் சொல்லனும் என கூறியுள்ளார். சிம்பு தொகுப்பாளர்களின் கேள்விக்கு அளித்த பதிலை அது அவர், தனுஷை தாக்கி பேசியதாக பகிரப்பட்டு வருவதால் சிம்பு ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... டிரெண்டில் இணைந்த உலகநாயகன்... டுவிட்டரில் அந்த ஒரு வார்த்தையால் உள்ளத்தை அள்ளிய கமல்ஹாசன்