பாம்பே
ரோஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் மணிரத்னமும், அரவிந்த்சாமியும் இணைந்து பணியாற்றிய படம் தான் பாம்பே. மனிதர்கள் எல்லாரும் சமமே, அவர்களை சாதி, மதம் என பிரிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் தேசப்பற்றை உணர்த்தும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் இடம்பெற்று இருக்கும். குறிப்பாக கலவரத்திற்கு பின் மக்கள் சாதி, மத பேதமின்றி கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் கண்களை கலங்கச் செய்யும்.