இந்நிலையில் இந்த ஹேமா கமிட்டி விவகாரத்தை அடுத்து தமிழக நடிகர் சங்கம் ஒரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற ஒரு கலந்தாய்வில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இந்த அறிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் கிடைக்கப்படவில்லை என்றாலும், தற்பொழுது நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி...
"நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பாக தொல்லை கொடுக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தாராளமாக புகார் அளிக்கலாம் என்றும், நடிகர் சங்கம் புகார் கொடுப்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பாதிக்கப்பட்டவர்கள், இதுகுறித்து ஊடகத்தில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல யூடியூப் தளத்தில் கண்டபடி ஆதாரம் இல்லாத விஷயங்களை பேசி நடிகர் நடிகைகள் பற்றி அவதூறு பரப்பினால், அவர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், அதேபோல ஒரு நடிகர் மீது அளிக்கப்பட்ட மீட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அந்த நடிகர் 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படும் என்றும், மேலும் இது சம்பந்தமாக கொடுக்கப்படும் புகார்களை கமிட்டி சார்பில் நடிகர் சங்கம் கண்காணித்துக் கொள்ளும் என்றும் அறிவித்திருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 8.. கமலை மிஞ்சுவாரா விஜய் சேதுபதி - இணையவாசிகள் ரியாக்ஷன் எப்படி இருக்கு?