மலையாள திரையுலகையைச் சேர்ந்த இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் சித்திக் ஆகிய இருவரும் மீதும் முதலில் இந்த பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக நடிகர் சித்திக் AMMAவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த திங்கட்கிழமை ராஜினாமா செய்தார். தொடர்ச்சியாக நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், இடவேளா பாபு உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. நடிகை மினு முனீர் சில தினங்களுக்கு முன்பு 4 முக்கிய நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.