நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முதலில் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த அந்த ஜோடி, அங்கு அனுமதி கிடைக்காததால் மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
24
இவர்களது திருமணத்தின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன், இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இவர்களது திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அதிக தொகை கொடுத்து வாங்கி உள்ளது. இந்த திருமணத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தும் பொறுப்பு இயக்குனர் கவுதம் மேனன் ஏற்றுள்ளார்.
34
திருமணத்துக்கு இரு தினங்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால், ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் கடற்கரையில் வைத்து திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், இவர்களது திருமணத்துக்காக கண்ணாடி மாளிகை போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறதாம்.
44
விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப் மற்றும் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகிய ஜோடிகளின் கல்யாணத்தில் பணியாற்றிய திருமண ஏற்பாட்டாளர்கள் தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வேலைகளையும் கவனித்து வருகிறார்களாம். இதுதவிர பல்வேறு சர்ப்ரைஸான விஷயங்களும் இவர்களது திருமணத்தில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.