கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் விவாகரத்து வழக்கு இழுபறியை சந்தித்து வந்தது. இடையே கொரோனா ஊரடங்கு வந்ததால் விவாகரத்து வழக்கு கிடப்பில் கிடந்த நிலையில், சுமார் 5 வருட போராட்டத்துக்கு பின்னர் தனக்கும் ஜெயஸ்ரீக்கும் விவாகரத்து கிடைத்துவிட்டதாக நடிகர் ஈஸ்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மனைவியை பிரிந்த சந்தோஷத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சோதனையான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.