தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சியின் கீழ் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெறும் படப்பிடிப்புகளில் பெப்சி ஊழியர்கள் தான் பணியாற்றுவார்கள். இப்படி இருக்கையில், நடிகர்கள் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை பெரும்பாலும் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளிநாட்டில் தான் நடத்தி வருகின்றனர்.