இந்த நிலையில் புஷ்பா 1 படத்தில் ஒலித்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டானது. குறிப்பாக சித் ஸ்ரீராம் குரலில் ஒலித்த பார்வை கற்பூர தீபமே ஸ்ரீவள்ளி என்ற பாடலும், கிராமிய இசை பாடகி ராஜலட்சுமி செந்தில் கணேசன் குரலில் ஒலித்த ஐயா சாமி பாடலும் மெகா ஹிட்டானது. ஆனால் இந்திய அளவில் சும்மா பட்டையை கிளப்பிய பாடல் என்றால், ஆண்ட்ரியா குரலில், சமந்தா நடனத்தில் வெளியான ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ஒரு பாடலில் நடனமாட நடிகை சமந்தா சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக சில தகவல்களும் வெளியானது.