விஜயின் மெகா ஹிட் படம்; நான் நடிச்ச மொத்த காட்சிக்கும் கத்திரி போடப்பட்டது - வருத்தப்பட்ட டாப் நடிகை!

First Published Oct 10, 2024, 4:52 PM IST

Thalapathy Vijay : தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெகா ஹிட் படமொன்றில் நடித்தும், அதில் தனது காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக வருத்தத்தோடு பேசியுள்ளார் பிரபல நடிகை.

Mersal Movie

தளபதி விஜய் தன்னுடைய கலை பயணத்தின் இறுதி கட்டத்தில் இருக்கின்றார் என்று நினைக்கும் பொழுது அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய வருத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இன்னும் 3 மணி நேரம் மட்டுமே தளபதி விஜய் திரையில் காண முடியும் என்று நினைக்கும் பொழுது, சினிமா ரசிகர்களாக அனைவருக்குமே அது மிகப்பெரிய மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. தளபதி விஜய் பொறுத்தவரை ஆரம்ப காலம் தொட்டே வித்தியாசமான பல கதைகளை நடிக்க எப்போதுமே அவர் தயங்கியதில்லை. 

அந்த வகையில் பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களில் நடித்து அப்ப படங்களை மெகா ஹிட் வெற்றி படங்களாக மாற்றினார் அவர். கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தளபதி விஜயின் "தெறி" திரைப்படம் தான் அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி பட ட்யூனை சுட்டு தமிழில் ஏ.ஆர்.ரகுமான் போட்ட அடிபொலி ஹிட் பாடல்கள் பற்றி தெரியுமா?

Director Atlee Kumar

அந்த திரைப்படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு "மெர்சல்" மற்றும் "பிகில்" ஆகிய இரண்டு திரைப்படங்களில் அட்லியோடு இணைந்து தளபதி விஜய் பயணித்திருக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களுமே வசூல் ரீதியாக மெகா ஹிட் வெற்றியை பெற்றது. அது மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகை பொருத்தவரை இதுவரை பிளாப் கொடுத்திடாத இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் அட்லி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மெர்சல்" திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவரின் காட்சிகள் முழுமையாக கத்தரி போடப்பட்டுள்ளது. அது குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் பேசியவர் மிகவும் வருத்தத்துடன் பேசி இருக்கிறார். இருப்பினும் காட்சிகளின் நீளம் கருதியே அந்த காட்சிகள் வெட்டுப்பட்டதாகவும், தனக்கு தெரிந்தது தான் அது நடந்தது என்றும் அவர் கூறுகிறார். 

Latest Videos


Actress Devadarshini

அந்த நடிகை வேறு யாரும் அல்ல, சின்னத்திரை மூலம் கலை உலகில் அறிமுகமாகி, இன்று மிகப்பெரிய வெள்ளித்திரை நட்சத்திரமாக மாறி இருக்கின்ற தேவதர்ஷினி தான். கடந்த 2003ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பார்த்திபன் கனவு" திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் தேவதர்ஷினி. தான் நடித்த அந்த முதல் திரைப்படத்திற்காகவே தமிழக அரசு வழங்கும் மாநில விருதை வென்றவர். சிறந்த காமெடி நடிகை என்கின்ற தலைப்பில் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. 

தொடர்ச்சியாக நல்ல பல படங்கலில் கடந்த 21 ஆண்டுகளாக நடித்து வரும் தேவதர்ஷினி, சிறந்த காமெடி நடிகை என்கின்ற பிரிவில் மூன்று முறை தமிழக அரசின் மாநில விருதுகளை வென்றிருக்கிறார். இந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்கனவே அவருடைய நடிப்பில் "யாவரும் வல்லவரே", PT சார், ராயன், ரகு தாத்தா, "லப்பர் பந்து" மற்றும் "மெய்யழகன்" உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த சூழலில் கடந்த 2017 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மெர்சல்" திரைப்படத்திலும் அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Devadarshini in Mersal

அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை தேவதர்ஷினி. கடந்த 2017 ஆம் ஆண்டு தளபதி விஜயோடு "மெர்சல்" திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் ஒரு செவிலியராக நான் நடித்திருந்தேன். விஜயோடு தான் முழுக்க முழுக்க எனக்காக காட்சிகள் வரும். குறைவான காட்சிகள் என்றாலும் சில காட்சிகள் காமெடியாகவும், சில காட்சிகள் மிகவும் எமோஷனலாகவும் அமைக்க பெற்றிருந்தது. 

என்னுடைய கதாபாத்திரம் அந்த திரைப்படத்தில் ஒரு நல்ல பெயரை பெரும் என்று தான் நினைத்தேன். ஆனால் மெர்சல் திரைப்படத்தில் வரும் அந்த பிளாஷ்பேக் காட்சி மட்டுமே சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் நீளம் கொண்டிருந்ததால் வேறு வழியில்லாமல் என்னுடைய காட்சிகள் மொத்தமாக வெட்டப்பட்டது. அதற்காக இயக்குனர் அட்லீ என்னிடம் பர்சனலாக வருத்தம் தெரிவித்ததும் உண்டு என்று கூறியிருக்கிறார் நடிகை தேவதர்ஷினி.

பாலிவுட் படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க No சொன்ன கமல்! காரணம் என்ன?

click me!