இந்தி பட ட்யூனை சுட்டு தமிழில் ஏ.ஆர்.ரகுமான் போட்ட அடிபொலி ஹிட் பாடல்கள் பற்றி தெரியுமா?

First Published Oct 10, 2024, 3:00 PM IST

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்தி படத்திற்காக போட்ட ட்யூன்களை ஒட்டுமொத்தமாக காப்பியடித்து தமிழ் பட பாடல்களுக்கு பயன்படுத்தி வேறலெவல் ஹிட் கொடுத்திருக்கிறார்.

AR Rahman

ரோஜா படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒரு இசைப்புயலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்திய ஏ.ஆர்.ரகுமான், அதன்பின்னர் தமிழில் ஷங்கர், மணிரத்னம், பாரதிராஜா போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இந்திய திரையுலகிலேயே அதிக தேசிய விருதுகள் வாங்கிய இசையமைப்பாளர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்று அசத்தி உள்ளார்.

Isaipuyal AR Rahman

தமிழில் பட மாஸ்டர் பீஸ் பாடல்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1999ம் ஆண்டு இசையமைத்த படம் தான் ஜோடி. இப்படத்தை பிரவீன் காந்தி இயக்கி இருந்தார். இப்படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். நடிகை திரிஷா நடிகையாக அறிமுகமானது இப்படத்தில் தான். இதில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்தார் திரிஷா. இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே இன்றளவும் பேசப்படுகின்றன.

இதையும் படியுங்கள்...டபுள் கேம் ஆடிய வைரமுத்து; MSV-க்கு எழுதிய அதே பாடலை ஏ.ஆர்.ரகுமானுக்கும் கொடுத்து ஹிட் பண்ணிட்டார்!

Latest Videos


Doli Saja Ke Rakhna

ஜோடி படத்தில் இடம்பெறும் ஒரு பொய்யாவது சொல் கண்ணே மற்றும் மேல் நாட்டு இசை ஆகிய இரண்டு பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் எல்லாம் காப்பியடித்து போடப்பட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுதான் உண்மை. ஜோடி படத்தில் இடம்பெற்ற எவர்கிரீன் ஹிட் பாடல்களான கை தட்டி தட்டி அழைத்தாயே, காதல் கடிதம், அஞ்சாதே ஜீவா, வெள்ளி மலரே ஆகிய பாடல்கள் எல்லாம் இந்தியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் 1998-ம் ஆண்டு வெளிவந்த Doli Saja Ke Rakhna என்கிற பாலிவுட் பட பாடல்களின் காப்பியாம்.

Jodi Movie

ஜோடி படத்திற்கு இசையமைக்க இயக்குனர் பிரவீன் காந்தி, ஏ.ஆர்.ரகுமானை அணுகியபோது ரகுமான் படுபிசியாக இருந்தாராம். இதனால் இசையமைக்க மறுத்திருக்கிறார். பின்னர் ஏ.ஆர்.ரகுமானிடம் பேசி அவர் இசையமைத்த இந்தி படமான Doli Saja Ke Rakhna படத்துக்கான ட்யூன்களில் இருந்து பாடல்களை உருவாக்க முடிவெடுத்து அப்பட பாடல்களை உருவாக்கி இருக்கின்றனர். பின்னர் படத்தின் பின்னணி இசையை சபேஷ் முரளியை வைத்து முடித்து படத்தை வெளியிட்டு இருக்கிறார் பிரவீன் காந்தி. 

இதையும் படியுங்கள்... ஒரே ஒரு ஓட்டில் ஏ.ஆர்.ரகுமானிடம் தேசிய விருதை பறிகொடுத்த இளையராஜா!!

click me!