சாவித்திரிக்கு காலையில் கணவனாகவும்.. மாலையில் மகனாகவும் நடித்த ஒரே நடிகர் யார் தெரியுமா?

First Published Oct 1, 2024, 4:18 PM IST

நடிகையர் திலகம் என பெயர் எடுத்த, சாவித்ரிக்கு ஒரே நாளில் ஜோடியாகவும், மகனாகவும் நடித்த பிரபல நடிகர் பற்றி உங்களுக்கு தெரியுமா?
 

Savitri Cinema

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பழம் பெரும் நடிகை சாவித்ரி. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன்,போன்ற நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் இருந்த இணையான மதிப்பும், மரியாதையும் இருக்கு கிடைத்தது. ஒரு கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருந்தார். 

சாவித்ரி ஜெமினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன், தமிழ் மற்றும் தெலுங்கில் இவருடன்... ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பல நடிகர்கள் ஏங்கியது உண்டு. ஆனால் இவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஒரு சில பிரபலங்களுக்கு மட்டுமே கிடைத்தது.

Savitri Movies

இன்றைய தலைமுறை நடிகர்கள்... ஒரு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்தாலே பெரிய விஷயம். ஆனால் அந்த காலத்தில், ஒவ்வொரு நடிகரும் வருடத்திற்கு 20-30 படங்களில் நடித்தார்கள். மூன்று ஷிப்டுகளாக தொடர்ந்து வேலை செய்வார்கள். அப்போது படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது, பிரமாண்ட அரங்குகள், விஷுவல் எஃபெக்ட்ஸ் போன்றவை கிடையாது. எனவே அடுத்தடுத்து பல படங்களில் ஒரே நேரத்தில் கமிட் ஆகி நடிப்பார்கள்.

இதனால் ஒரு படத்தில் நடிகைக்கு ஜோடியாக நடித்து வந்தால், வேறு ஒரு படத்தில் அந்த நடிகை ஹீரோவுக்கு தங்கையாக நடிப்பார். இது போல் பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த காலத்தில் அப்படி பட்ட பழக்கம் முற்றிலும் மாறி விட்டது. ஒரு ஹீரோவுடன்... நடிகைகள் இரண்டு படங்கள் இணைந்து நடித்தாலே அபூர்வம். ஒருவேளை 3 படங்களுக்கு மேல் நடித்தால்... வாயிக்கு வந்ததை எல்லாம் சில யூ டியூப் சேனல்கள் தங்களின் கற்பனை கதையோடு ஜோடித்து... அவர்களின் வாழ்க்கையிலேயே விளையாடி விடுகிறார்கள். 

பிகினி உடையில் பிக்பாஸ் பிரபலத்துக்கு புரபோஸ்; வனிதாவின் 4வது கணவர் இவரா?

Latest Videos


Giri Babu And Savitri Movies

ஆனால் அந்த காலத்தில், என்.டி.ஆருக்கு பேத்தியாக நடித்த ஸ்ரீதேவி, வளர்ந்த பிறகு அவருடன் ஜோடியாக நடித்தார். அதேபோல், என்.டி.ஆருக்கு மனைவியாக நடித்த அஞ்சலி, பின்னர் அவருக்குத் தாயாக நடித்தார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், இதுபோன்ற இணைகள் நிறைய உள்ளன. 

இவை அனைத்தையும் விட விசித்திரமான சம்பவம் சாவித்ரிக்கு நடந்தது. நடிகர் கிரிபாபு சாவித்ரிக்கு கணவராகவும் மகனாகவும் ஒரே நேரத்தில் நடித்தார். ஆம் 1973 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் கிரிபாபு. அவரது முதல் படம் ஜெகமேமாயா என்கிற டோலிவுட் படம்.

அதே ஆண்டு ஜோதி லட்சுமி என்ற பெயரில் வெளியான படத்தில் சாவித்ரிக்கு கணவராக நடிக்கும் வாய்ப்பு கிரிபாபுவுக்கு கிடைத்தது. அதேபோல், அனகனகா ஒரு தந்திரி என்ற படத்தில் கிரிபாபு சாவித்ரிக்கு மகனாகத் நடித்தார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடந்ததாம். 

Giri Babu Acting Son and Husband

மதியம் வரை ஜோதி லட்சுமி படப்பிடிப்பில் சாவித்ரிக்கு கணவராகவும், மதியம் அனகனகா ஒரு தந்திரி படத்தில் அவருக்கு மகனாகவும் நடிப்பாராம். இது மிகவும் அரிதான வாய்ப்பு என கிரிபாபு தன்னுடைய அனுபவத்தை புரிந்துள்ளார்.  என்.டி.ஆர், ஏ.என்.ஆர் இவர்களுக்குப் பிறகு வந்த தலைமுறை நடிகர்களில் சோபன் பாபு மட்டுமே சாவித்ரியுடன் நடித்தார். சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவிற்குக் கூட அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கிரிபாபு அதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம். 

கிரிபாபு ஹீரோவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். ஆனால் வில்லனாகவே இவரால் சோபிக்க முடிந்தது. 70-80களில் கொடூரமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்களை ரசிகர்களை மிரள வைத்தார். 90களில் குணச்சித்திர நடிகராக மாறி, நீண்ட திரை வாழ்க்கைக்கு வழி வகுத்துக் கொண்டார். கிரிபாபுவின் மகன் ரகுபாபு வில்லனாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

அச்சச்சோ.. ஒருவேளை பயில்வான் சொன்னது உண்மை தான் போல! ஆர்த்தி சமாதான பேச்சுவார்த்தையின் பின்னணி!

Savitri Bio Pic

எந்த ஒரு திரைப்படப் பின்னணியும் இல்லாத ஒரு கிராமத்துப் பெண்ணான சாவித்ரி, நாடகங்களில் நடித்து திரையுலகில் நுழைந்தார். யாராலும் தொட முடியாத உயரத்தை அடைந்தார். தேவதாஸ், மிஸ்ஸம்மா, மாயாபஜார், குண்டம்மா கதை, மூக மனசுலு போன்ற பல அற்புதமான படங்களில் நடித்தார். 

சாவித்ரிக்கு தர்ம குணம் அதிகம். உதவி கேட்டு வந்த அனைவருக்கும் உதவி செய்வார். காலப்போக்கில், அவரது சொத்துக்கள் அனைத்தும் கரைந்து போயின. மறுபுறம், கணவரிடமிருந்து பிரிந்து மன வேதனையை அனுபவித்தார். ஜெமினி கணேசன் செய்த துரோகத்திலிருந்து மீள்வதற்காக மதுவுக்கு அடிமையானார்.
அவரது திரை வாழ்க்கையும் மந்தமானது. அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். இறுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. 19 மாதங்கள் கோமாவில் இருந்த சாவித்ரி காலமானார். கடைசி நாட்களில் அவரைப் பார்க்கவோ, ஆறுதல் சொல்லவோ ஆளில்லாமல் தவித்தார். 

இவருடைய வாழ்க்கையை தழுவி, கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் நாக் அஸ்வின் மகாநடி என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கினார். தெலுங்கு மற்றும் தமிழில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மகாநடி சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில், இந்த படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்.

click me!