'எதிர்நீச்சல்' சீரியலில் குணசேகரனாக நடித்து வரும் இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சன் டிவி தொலைக்காட்சியில், டிஆர்பி-யில் மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் குணசேகரன் என்கிற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மாரிமுத்து. இவர் பல முன்னணி இயக்குனர்களுடன் துணை இயக்குனராக பணியாற்றியது மட்டுமின்றி, சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.
26
மேலும் சமீப காலமாக, எதார்த்தமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் குறித்து பல்வேறு பேட்டிகளில் பகிர்ந்து கொண்டு வரும் மாரிமுத்து, சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த 'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை வெளிப்படையாக கூற சில சர்ச்சைகள் எழுந்தது.
குறிப்பாக நடிகர் கதிர் நடித்த, கதாபாத்திரம் மாரி செல்வராஜ்... அவரின் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டது என தெரிவித்திருந்தார். அதேபோல் நடிகர் கதிரை படப்பிடிப்பின் போது கொளுத்தும் வெயிலில், வெறும் காலோடு மாரி செல்வராஜ் ஓடவிட்டது முதல் நாயகனை படாது பாடு படுத்தியதாக கூறிய தகவல்கள் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
46
இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மாரிமுத்து ரஜினிகாந்த் நடித்து வரும், ஜெயிலர் படத்தில் தலைவருடன் இணைந்து நடித்து வருவதை தொடர்ந்து, இப்படம் குறித்த அப்டேட் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது படம் குறித்த அப்டேட் கூறவில்லை என்றாலும், ரஜினி தன்னிடம் பகிர்ந்து கொண்ட தகவலை தான் கூறியுள்ளார்.
திரையுலகில் நடிக்க வருவதற்கு முன்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பேருந்தில் நடத்துனராக பணியாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதன் பின்னரே, நண்பர் மற்றும் அண்ணனின் உதவியுடன் நடிப்பு பள்ளியில் முறையாக பயிற்சி பெற்று, ஒரு நடிகராகவும் மாறினார். ஆனால் இவர் நடத்துனராக இருந்தபோதே, மேடை நாடகம் ஒன்றில் பீஷ்மராக நடித்துள்ளாராம். மேடை நாடகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பீஷ்மராக நடிக்க இருந்தவர் திடீரென வராத காரணத்தால், ரஜினிகாந்துக்கு வசனம் எல்லாம் சொல்லிக் கொடுத்து அவரை பீஷ்மராக நடிக்க வைக்க மேடையில் ஏற்றி உள்ளனர். அப்போது தன்னுடைய வழக்கமான ஸ்டைல் மற்றும் வேகமான நடையுடன் வந்து பீஷ்மரை போல் அமர்ந்து செம்ம ஸ்டைலாக வசனம் பேசியுள்ளார்.
66
அந்த சமயத்தில் பலரும், இவரை கை தட்டி ஆரவாரம் செய்து பாராட்டியுள்ளனர். இந்த தகவலை ரஜினிகாந்தே தன்னிடம் கூறியதாக, மாரிமுத்து கூறியுள்ளார். அந்த அந்த கை தட்டல்களும் பாராட்டுகளும் கொடுத்த ஊக்கம் தானோ என்னவே... ரஜினிகாந்தை தீவிரமாக திரைப்பட துறையில் பயணிக்க வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.