பிரபல நடிகர் துல்கர் சல்மான், இவர் மலையாலம், தமிழ் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 23, 2025 அன்று, "ஆபரேஷன் நும்கோர்" என்ற பெயரில் கேரளாவின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் துல்கர் சல்மானின் கேரளாவில் உள்ள கொச்சி வீடு மற்றும் பிரித்விராஜ் சுகுமாரனின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையானது பூட்டானில் இருந்து வரி செலுத்தாமல் சொகுசு கார்கள் வாங்கப்பட்டதையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.