அட்லீக்கு நோ சொல்லிவிட்டு.. அவரின் உதவி இயக்குனருக்கு ஓகே சொன்ன ரஜினி- சூப்பர்ஸ்டாரின் அடுத்தபட டைரக்டர் இவரா?

First Published Aug 27, 2022, 10:13 AM IST

Thalaivar 170 : நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் தற்போது நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படம் ஜெயிலர். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே நடிகர் ரஜினியின் 170-வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த லிஸ்டில் இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, அட்லீ ஆகியோர் இருந்தனர். இவர்களில் யாராவது ஒருவருக்கு தான் அந்த வாய்ப்பு போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வேறு ஒரு இயக்குனருக்கு அந்த வாய்ப்பு சென்றிருக்கிறது.

இதையும் படியுங்கள்... விக்ரமுக்கு கூட கம்மி தான்... பொன்னியின் செல்வனில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியது எந்த நடிகர் தெரியுமா?

அது இளம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தான். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டான் படத்தை இயக்கியவர் ஆவார். டான் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார், அப்படம் மிகவும் பிடித்துப் போனதால் சிபியை அழைத்து கதை கேட்டாராம். அவர் சொன்ன கதையும் பிடித்துப் போனதால் தனது அடுத்த பட வாய்ப்பை வழங்கி உள்ளாராம் ரஜினி.

சிபி சக்ரவர்த்தி இயக்கிய முதல் படமான டான் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தான் ரஜினியின் 170-வது படத்தையும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிபி சக்ரவர்த்தி இயக்குனர் அட்லீயிடம் மெர்சல், தெறி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். ஜெயிலர் படத்தை முடித்த பின்னர் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கு நேர்ந்த அவமானம்... கலங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்

click me!