இந்நிலையில், அதுகுறித்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அடுத்த படத்தின் கதையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிபி, கதை முழுவதுமாக தயார் ஆன பிறகு தான் அதற்கு யார் பொறுத்தமாக இருப்பார் என்பதை முடிவு செய்ய உள்ளதாகவும், விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளதாக பரவி வரும் தகவல் உண்மை இல்லை எனவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.