Published : Oct 02, 2022, 02:23 PM ISTUpdated : Oct 02, 2022, 02:26 PM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன் ராஜ ராஜ சோழன் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.
தமிழ் திரையுலகில் தரமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படிக்காதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய 5 படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
24
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை அக்கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி சமத்துவ மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்கிற கலை திருவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது வெற்றிமாறன் ராஜ ராஜ சோழன் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. அவர் பேசியதாவது : “கலையை சரியாக கையாள தவறினால் நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள்.
44
அதேபோல் ராஜ ராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்” என பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.