தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது சினிமா பக்கம் தனது முழு கவனத்தை திருப்பி உள்ளார். இவர் ஹீரோவாக அறிமுகமான தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஜூலை மாதம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியானது. இப்படத்தை விசில் பட இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர்.
24
பிரம்மாண்ட பொருட்செலவில் லெஜண்ட் சரவணனே தயாரித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார். பிரபு, விவேக், யோகிபாபு, விஜயகுமார், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சியெல்லாம் திரையிடப்பட்டது.
இவ்வாறு மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன்காரணமாக இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் முடிவையும் கைவிட்டு விட்டார் அண்ணாச்சி. இதையடுத்து அவர் தான் நடிக்கும் அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளதாக கூறப்பட்டது.
44
இந்நிலையில், தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர் சி, லெஜண்ட் சரவணனை சந்தித்தது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரின் சந்திப்பின் பின்னணியில் படம் இயக்குவது குறித்து எதுவும் ஆலோசிக்கப்படவில்லை என்றும் வேறு சில காரணங்களுக்காக அவரை சுந்தர் சி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.