தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது சினிமா பக்கம் தனது முழு கவனத்தை திருப்பி உள்ளார். இவர் ஹீரோவாக அறிமுகமான தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஜூலை மாதம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியானது. இப்படத்தை விசில் பட இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர்.
இவ்வாறு மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன்காரணமாக இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் முடிவையும் கைவிட்டு விட்டார் அண்ணாச்சி. இதையடுத்து அவர் தான் நடிக்கும் அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளதாக கூறப்பட்டது.