நரேன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட மிஷ்கின், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.