பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிறகு சுமார் மூன்று ஆண்டுகால இடைவெளியில் இயக்குனர் மாரி செல்வராஜ் உருவாக்கிய திரைப்படம் தான் "கர்ணன்". பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷுடன் இணைந்த முதல் திரைப்படமிது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த திரைப்படத்தில் எமராஜா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல மலையாள திரை உலக நடிகர் லால், தன்னுடைய அசாத்திய நடிப்பால் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்றே கூறலாம். இந்த படத்திற்கு பிறகு தான், பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய வாழ்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை கொண்டு தான், தனது படங்களை இயக்கி வருகின்றார் என்பது தெரியவந்தது.