பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திற்காக தீயாய் வேலை செய்யும் மணிரத்னம்... ரிலீஸ் தேதியுடன் வந்த ஹாட் அப்டேட்..!

First Published Oct 5, 2022, 3:21 PM IST

Maniratnam : பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகத்திற்கான பணிகளை இயக்குனர் மணிரத்னம் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் 60 ஆண்டு உழைப்புக்கு பின்னர் சாத்தியமாகி உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் நடித்துள்ளார்.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இதுதவிர ரவி வர்மன் ஒளிப்பதிவாளராகவும், கலை இயக்குனராக தோட்டா தரணியும் பணியாற்றி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அந்த விஷயத்தில் மணிரத்னம் ஒரு கிங்.. பொன்னியின் செல்வன் பார்த்து மெர்சலான ஷங்கர்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் வசூல் 5 நாட்களில் 300 கோடியை நெருங்கி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் பாகத்திற்கு மக்கள் அளித்து வரும் வரவேற்பால் படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திற்கான பணிகளை இயக்குனர் மணிரத்னம் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தின் பின்னணி பணிகளை துரிதமாக முடித்து படத்தை 7 மாதத்தில், அதாவது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டுக்கு பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். 

இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல்... பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் பிகில் கிளப்பும் பொன்னியின் செல்வன்

click me!