தமிழ் சினிமாவின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் 60 ஆண்டு உழைப்புக்கு பின்னர் சாத்தியமாகி உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் வசூல் 5 நாட்களில் 300 கோடியை நெருங்கி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் பாகத்திற்கு மக்கள் அளித்து வரும் வரவேற்பால் படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது.