இயக்குனர் பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ராமராஜன், போன்ற பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கே.எஸ்.ரவிக்குமார். இதையடுத்து 1990 ஆம் ஆண்டு, கே.எஸ்.ரவிக்குமார் இயக்குநரானாக அறிமுகமான திரைப்படம் 'புரியாத புதிர்'. ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் வெளியான இந்த படத்தில், ரகுமான், ரகுவரன், சரத்குமார், ஆனந்த் பாபு, என நான்கு நடிகர்கள் நடித்திருந்தனர். நடிகை ரேகா, சித்தாரா ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர்.