பரப்பாக பறக்கும் சுந்தர் சி; அரண்மனை 5 ஆன் தி வே - லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

First Published Oct 19, 2024, 11:25 PM IST

Aranmanai 5 : இயக்குனர் சுந்தர் சி விரைவில் தன்னுடைய அரண்மனை திரைப்படத்தின் ஐந்தாம் பாகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Murai Maman

தமிழ் சினிமாவில் "முறைமாமன்" என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் சுந்தர் சி. கோலிவுட் உலகை பொறுத்தவரை பல ஆண்டுகளாக "கமர்சியல் கிங்" என்று சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பான பல திரைப்படங்களை எடுத்தவர் அவர். திரைத்துறையில் இயக்குனராக அறிமுகம் ஆவதற்கு முன்பே பிரபல இயக்குனர் மணிவண்ணனின் இயக்கத்தில் உருவான "வாழ்க்கை சக்கரம்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர் சுந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நைட்டில் 70,000 ரூபாயை காலி பண்ணிய பூஜா ஹெக்டே - எப்படி தெரியுமா?

Anbe Sivam

முறைமாமன் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் வெளியான "முறை மாப்பிள்ளை", "உள்ளத்தை அள்ளித்தா", "மேட்டுக்குடி", "அருணாச்சலம்" மற்றும் "நாம் இருவர் நமக்கு இருவர்" என்று தொடர்ச்சியாக மெகா ஹிட் திரைப்படங்களை தமிழ் திரையுலகத்திற்கு கொடுத்த அவருக்கு, "அருணாச்சலம்" திரைப்படத்திற்காக தமிழக அரசு வழங்கும் சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருது வழங்கப்பட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான "அன்பே சிவம்" திரைப்படத்தை இயக்கியது சுந்தர் சி தான். அந்த திரைப்படம் வெளியான கால கட்டத்தில் அது பெரிய அளவில் பாராட்டப்படவில்லை என்றாலும், இப்பொழுது அது மிகப்பெரிய அளவில் வியந்து பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos


Aranmanai movie

தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான "அரண்மனை" என்கின்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த சுந்தர் சி, தொடர்ச்சியாக அரண்மனை 2, அரண்மனை 3 மற்றும் அரண்மனை 4 ஆகிய நான்கு வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தார். இப்பொது வடிவேல் உடன் பல ஆண்டுகளில் கழித்து மீண்டும் கேங்கர்ஸ் என்கின்ற திரைப்படத்தில் அவர் அண்மையில் இணைந்திருந்தார். இந்த சூழலில் தான் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை திரிஷாவை வைத்து சுந்தர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

Aranmanai 5 update

இப்படி ஏற்கனவே கேங்கர்ஸ் மற்றும் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய திரைப்படங்களில் பிஸியாக பணியாற்றி வரும் சுந்தர் சி, கலகலப்பு திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கு உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் நவம்பர் மாத இறுதியில் அரண்மனை திரைப்படத்தின் ஐந்தாம் பாகத்தை எடுக்க அவர் பணிகளை துவங்க உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. நிச்சயம் மக்கள் மத்தியில் அந்த திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

5 நாள் தான் உங்களுக்கு அவகாசம்; தளபதி விஜய்க்கு வைக்கப்பட்ட செக் - என்ன நடந்தது?

click me!