உலகமே தற்போது ரஜினியை கொண்டாடி வருகிறது. இதற்கு காரணம் அவரின் ஜெயிலர் திரைப்படம் தான். ஜெயிலர் வெற்றி ரஜினிக்கு மகிழ்ச்சியை தந்தாலும், அதற்கான கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. ஏனெனில் அவர் தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே இமயமலைக்கு கிளம்பி சென்ற ரஜினிகாந்த், அங்கு தன்னுடைய ஆன்மீக பயணத்தில் பிசியாக உள்ளார்.