படத்தில் பழம் என்னும் ரோலில் வரும் தனுசுக்கும் அவரது தோழியாக வரும் நித்யா மேனனுக்கும் இடையிலான உறவு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் என இரண்டு பெண்கள் மீது நாயகனின் கண்ணோட்டம் பதிகிறது. இறுதியில் தனுஷ் இந்த மூன்று நாயகிகளில் எவருடன் ஜோடி சேர்வார் என்பதே படத்தின் கதையாக இருக்க கூடும்.
மேலும் செய்திகளுக்கு...போட்டோ போதாதென நீச்சல் உடை வீடியோவையும் வெளியிட்ட பிக்பாஸ் யாஷிகா..
அதோடு கண்டிப்பான தந்தையின் பிள்ளையாக இருக்கும் தனுஷ் தனது தாத்தா மற்றும் தோழியின் அரவணைப்பால் அவ்வப்போது மனதை தேற்றி கொள்கிறார். மண் சோர்வுடன் இருக்கும் இளைஞன் இறுதியில் காவல் துறை அதிகாரி இருக்கும் தனது தந்தையின் அன்பை பெறுகிறாரா ? என்பதை படத்தின் கிளைமாக்ஸ்.
இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்துள்ளார். கலாநிதிமாறன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவன பேனரின் கீழ் இந்த படத்தை தயாரித்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது. அதிலும் தெலுங்கு ரசிகர்கள் தனுஷை கொண்டாடி வருகின்றனர். விரைவில் வாத்தி படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கு சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைக்கும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் குறித்த எதிர்பார்ப்பு அங்கு ஏற்கனவே மிகுந்திருந்தது. இந்நிலையில் இன்று திருச்சிற்றம்பலம் படம் மூலம் அங்குள்ள ரசிகர்களை கவர்ந்து விட்டார் தனுஷ்.